7 5
சினிமாபொழுதுபோக்கு

அதை இன்று வரை கழட்டவில்லை.. தன் காதல் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்

Share

அதை இன்று வரை கழட்டவில்லை.. தன் காதல் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.

அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி தற்போது ஹிந்தி சினிமாவில் கால் பதித்துள்ளார்.

அவர் நடித்த பேபி ஜான் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை.

தமிழ், தெலுங்கு என நடித்து வந்த கீர்த்தி, மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதை பெற்றார். சமீபத்தில், தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கீர்த்தி அவருடைய காதல் கதை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ” ஆர்குட் என்ற சமூக வலைத்தளம் மூலம் முதன் முதலில் பேச ஆரம்பித்தோம்.

அதன் பின், தொடர்ந்து பேச தொடங்கினோம். ஒரு நாள் அவரிடம் தைரியம் இருந்தால் என்னிடம் புரபோஸ் செய்யுமாறு கூறிவிட்டேன். கடந்த 2010-ம் ஆண்டு முதன்முறையாக அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார்.

அவர் அன்று எனக்கு கொடுத்த மோந்திரத்தை நான் இன்றுவரை கழட்டவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது. அந்த மோந்திரத்தை நீங்கள் என்னுடைய அனைத்து படங்களிலும் காண முடியும்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...