17125841431
சினிமாபொழுதுபோக்கு

பாலிவுட்டில் ரௌடி பேபிக்கு அடித்த ஜாக்பாட்! நயன்தாராவையே மிஞ்சி பேசப்பட்ட சம்பளம் ?

Share

பாலிவுட்டில் ரௌடி பேபிக்கு அடித்த ஜாக்பாட்! நயன்தாராவையே மிஞ்சி பேசப்பட்ட சம்பளம் ?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் ஒட்டுமொத்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ள ராமயணா படத்தில், நடிகை சாய் பல்லவிக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ராமயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் சரித்திர படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.

இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

மேலும் ராவணனாக நடிகர் யாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுவதோடு, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானும், ஹேன்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்க உள்ளார்களாம்.

இவ்வாறான நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...