”கனவு மெய்ப்பட்டுவிட்டது” – சமந்தா நெகிழ்ச்சி

”கனவு மெய்ப்பட்டுவிட்டது” – சமந்தா நெகிழ்ச்சி

பிரபல இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது சாகுந்தலம் திரைப்படம். இந்தப் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

இந்த படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், கவுதமி உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். அல்லு அர்ஜுன் மகள் அர்ஹா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

shaakuntalam sam 1

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இத் திரைப்படம் குறித்து சமந்தா தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

“என் சிறு வயதில் நான் விசித்திரமான கதைகளை நம்புவேன். இப்போதும் நான் அதில் இருந்து மாறவில்லை. இப்படி ஒரு சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அந்த கனவை நனவாக்கிய இயக்குநர் குணசேகரன் அவர்களுக்கு எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version