ezgif 3 ccbd27fc38
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

பூமிக்கு திரும்பியது நாசாவின் ‘ஓரியன்’

Share

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.

சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் தேதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் ‘ஓரியன்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.

6 நாட்கள் பயணத்துக்கு பின் ‘ஓரியன்’ விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த ‘ஓரியன்’ விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

#world #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்: மேலாளர்கள் உட்பட பலர் கைது என அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட மூன்று...

world 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி: 10 இடங்களை முதன்மைப்படுத்த மாவட்ட செயலகம்

திட்டம்முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும்...

world 36
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தொடரும் கனமழை: 5 மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ்த்தளத் தளம்பல் நிலை (Low-level atmospheric disturbance) காரணமாக, நாட்டின்...

world 35
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உதய கம்மன்பிலவுக்கு பொலிஸ் அழைப்பாணை: ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்து விசாரணை

தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, எதிர்வரும் மே...