ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு !
16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியூதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கியுள்ளார் .
Leave a comment