tamilni 77 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை

Share

நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை

தனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது, தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தன்னுடைய பதவி விலகல் கடிதத்திலேயே வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார் என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு நீதி கோரி இன்று கொழும்பில் சடத்தரணிகள் பெருமளவானோர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாதாரணமாக நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு அதில் எங்களுக்கு இணக்கமில்லை என்று சொன்னால் நாங்கள் அதற்கு மேற்பட்ட நீதிமன்றத்தை நாடுவோம்.

ஆனால் ஒரு நீதிபதிக்கே நியாயம் கிட்டாமல், ஒரு நீதிபதி நீதித்துறையில் தான் வழங்கிய தீர்ப்புக்காக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, தன்னுடைய செயல்களுக்காக உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார்.

தனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது, தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று தன்னுடைய பதவி விலகல் கடிதத்திலேயே வெளிப்படையாகச் சொல்லி நாட்டை விட்டு போகின்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையினால் தான் எங்களுடைய வழமையான எதிர்ப்பு முறையினை கைவிட்டு வீதிக்கு இறங்கி இன்று உச்சநீதிமன்றத்திற்கு முன்பாகவும், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்பாகவும் ஒன்று திரண்டு இந்த கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.

நீதிச் சேவைக்கு தொடர்ச்சியாக ஒரு அச்சுறுத்தல் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இது இப்போது ஒரு உச்ச நிலையை அடைந்திருக்கின்றது. ஆகையினால் உடனடியாக இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த நிலை திருத்தப்பட வேண்டும்.

இல்லை என்று சொன்னால் சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டில், முன்னொரு காலத்திலே இருந்தது என்ற சரித்திரமாக மட்டும் இருக்குமே தவிர, சட்டத்தின் ஆட்சி என்றால் என்னவென்று கேட்கும் ஒரு சூழ்நிலை வந்துவிடும்.

ஆகையினால் இது சம்பந்தமாக உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எங்களுடைய கோஷமாக இருக்கின்றது என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

bts pictures 0ynzwrpbewd63qlf
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...