6 scaled
உலகம்செய்திகள்

பின்னணியில் இந்தியா: CCTV காட்சிகள் வெளியாகியுள்ளதாக தகவல்

Share

பின்னணியில் இந்தியா: CCTV காட்சிகள் வெளியாகியுள்ளதாக தகவல்

கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர் கொல்லப்படும் காட்சிகள் CCTV கமெராவில் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கனேடிய குடிமகன் ஒருவர், கனடா மண்ணில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்படும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளதாக The Washington Post என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு வாகனங்களில் வந்த ஆறு பேர், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த குற்றச்செயலை நிறைவேற்றியுள்ளதாகவும், நிஜ்ஜரை நோக்கி 50 துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டதாகவும், அவற்றில் 34 குண்டுகள் அவரைத் தாக்கியதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குருத்வாராவிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளதாகவும், 90 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சிகள் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் The Washington Post தெரிவித்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் இருவர், சீக்கிய உடை அணிந்து, தாடியுடன் காணப்பட்ட நபர்கள் என, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ள விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...