wedukunari 720x375 1
செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்!

Share

வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்!

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப் பரப்பில் அதிகளவான இராணுவத்தினர் காணப்படுகின்றனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அங்கிருந்த விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்குள் செல்ல முடியாது என தொல்பொருள் திணைக்களம் தடை விதித்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு இடம்பெற்று வருகின்றது .

இந் நிலையில் ஆலயத்துள் உள்ள விக்கிரகங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அழிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பல விக்கிரகங்களும் சூலங்களும் காணாமல் போயுள்ளன எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆலயத்துக்கு பெளத்த தேரர்கள் அமரும் கதிரை உட்பட பல பொருள்கள் உழவு இயந்திரங்களில் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை பெளத்த மயமாக்குவதற்கான வேலைகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள பிரதேச மக்கள், இவ் விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...