rtjy 223 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு மொட்டுவின் உறுப்பினர் போர்க்கொடி

Share

ரணிலுக்கு மொட்டுவின் உறுப்பினர் போர்க்கொடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படும் என்று எவரும் கூறவில்லை.

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய பல தகுதியான வேட்பாளர்கள் எமது கட்சியில் உள்ளனர்.

ஆகவே, ரணிலுக்கு ஆதரவளிப்போம் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை. பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவமே எமது நோக்கமாகும்” என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைக் களமிறக்க வேண்டும் என்று மொட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் பொது வெளியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மற்றுமொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ரஞ்சித் பண்டார மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதாரச் சீர்திருத்தங்களில் நாடாளுமன்றத்தின் பங்கு முக்கியமானது: ஐஎம்எஃப் பிரதிநிதிகளிடம் சபாநாயகர் உறுதி!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுக் குழுப் பணிகளுக்கான ஆயத்த நடவடிக்கையாக,...

Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருவளை கடலில் 6.2 பில்லியன் ரூபா ஹெராயின் மீட்பு: 6 மீனவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

பேருவளை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 323 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் கைது...

Untitled 43
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையின் வளர்ச்சிக்கு உலக வங்கி பாரிய நிதியுதவி: 7% பொருளாதார வளர்ச்சியை எட்ட புதிய திட்டம் அறிமுகம்!

இலங்கையின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தவும், நடுத்தர காலத்தில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய...

Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...