rtjy 179 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

Share

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சீனா எப்படி இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை சீனா வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், கலாநிதி மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு வடகொரிய அதிபர் சென்றமை தொடர்பிலும் ரஷ்யாவிற்கு வடகொரியா எவ்வாறு ஆயுதங்களை வழங்கவுள்ளது குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவிடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யாவிற்கு கூடுதல் ஆயுதங்கள், உணவு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வடகொரியாவிற்கு பெற உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா, மூன்றாம் தரப்பான வடகொரியா மூலம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போர் வரும் குளிர்காலத்தில் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்படும். இது மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தத்தின் போது சீனா இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், அதே நிலைதான் இன்று ரஷ்யாவிற்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...