black fungus
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!

Share

கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!

நாட்டில் பரவலாக, கரும் பூஞ்சை நோய் தாக்கிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொழும்பு தேசிய மருத்துவமனை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கறுப்பு பூஞ்சை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பினும் இந்த நோய் கொரோனா நோயாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

ஆனால் தற்போது கொரோனா நோயாளர்கள் சிலரும் கறுப்பு பூஞ்சை நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்போது இந்த நோய் அவர்களைத் தாக்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தொற்று அல்லாத நோய் உள்ளவர்களுக்கும் இது உருவாக வாய்ப்பு உள்ளது .

முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். மருத்துவ ஆலோசனை இன்றி மருந்து பொருள்களை பெற்றுக்கொள்ளக்கூடாது.

எவ்வாறிருப்பினும் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லை – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...