tamilni 183 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணை

Share

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் புதிய விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

எனினும் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், மீளவும் அவ்வாறான விசாரணைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பனவற்றின் ஊடாக கிரமமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள காரணத்தினால் மீண்டும் அவ்வாறானதொரு விசாரணை தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் இடம்பெற்றதன் பின் அவுஸ்திரேலிய பொலி, அமெரிக்காவின் எஸ்பிஐ மற்றும் இன்டர்போல் போன்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தியதாகவும் அந்த தகவல்கள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...