tamilni 184 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

Share

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது இப்போது நாட்டில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் இரண்டாவது மிக முக்கியமான சட்டவிரோத நடவடிக்கையாக மாறியுள்ளது.

இந்த செயற்பாடு, 2014 இல் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று இடங்களால் முன்னோக்கி வந்துள்ளதாக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாய மதிப்பீட்டு அறிக்கையில் நிதிப் புலனாய்வுப் பிரிவு இதனை வெளிப்படுத்தியுள்ளது.

அதிகமான சம்பவங்கள் முறைப்பாடுகளாக பதிவாகியிருந்தாலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் குறைவான எண்ணிக்கையிலான வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் முதல் சட்டவிரோத செயற்பாடுகளாக போதைப்பொருள் மற்றும் சுங்கம் தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...