rtjy 133 scaled
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அகழ்வு பணியின் ஐந்தாவது நாளான (11.09.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவர், மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும், ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

13 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் குறித்த புதை குழியில் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக உடலங்கள் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும், மிக மிக நெருக்கமாக பல மனித எலும்பு கூட்டு தொகுதிகள் காணப்படுகின்றன எனவும் அகழ்வு பணி தொடங்கியதில் இருந்து இதுவரை ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட மனித எச்சத்தில் துப்பாக்கிச் சன்னம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...