tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

Share

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

இலங்கைக்கு எதிராக ஒலிபரப்பப்பட்டுள்ள சனல்– – 4 காணொளி தொடர்பில் பிரிட்டன் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சனல்– – 4 காணொளி தொடர்பாக அரசாங்க புலனாய்வு பிரிவு பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்துள்ள முறைப்பாட்டிற்கிணங்க, பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் பல இடங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில், சனல்-04 அலைவரிசை அண்மையில் காணொளியொன்றை வெளியிட்டு, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக அதில் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.

தம்மால் இதற்கு முன்னர் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகளுடன் பதில் வழங்கப்பட்டுள்ள நிலையில், சனல்-04 அலைவரிசை மீண்டும் தன்னிச்சையாக தம்மை அசௌகரியத்துக்குட்படுத்தும் நோக்கில் இந்தக் காணொளியை வெ ளியிட்டுள்ளதாக சுரேஷ் சலே மேற்படி ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கிணங்கவே, மேற்படி காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த காணொளியை வெளியிடுவதற்கு முன்பதாக சனல்-04 அலைவரிசை கடந்த ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் இக்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை கேட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதாகவும் மேற்படி சம்பவம் நடந்த காலத்தில், தாம் இலங்கையில் தங்கியிருக்கவில்லையென்றும் சுரேஷ் சலே அதற்கு மறுதினமே குறித்த தொலைக்காட்சி அலைவரிசைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...