tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

Share

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

இலங்கைக்கு எதிராக ஒலிபரப்பப்பட்டுள்ள சனல்– – 4 காணொளி தொடர்பில் பிரிட்டன் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சனல்– – 4 காணொளி தொடர்பாக அரசாங்க புலனாய்வு பிரிவு பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்துள்ள முறைப்பாட்டிற்கிணங்க, பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் பல இடங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில், சனல்-04 அலைவரிசை அண்மையில் காணொளியொன்றை வெளியிட்டு, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக அதில் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.

தம்மால் இதற்கு முன்னர் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகளுடன் பதில் வழங்கப்பட்டுள்ள நிலையில், சனல்-04 அலைவரிசை மீண்டும் தன்னிச்சையாக தம்மை அசௌகரியத்துக்குட்படுத்தும் நோக்கில் இந்தக் காணொளியை வெ ளியிட்டுள்ளதாக சுரேஷ் சலே மேற்படி ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கிணங்கவே, மேற்படி காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த காணொளியை வெளியிடுவதற்கு முன்பதாக சனல்-04 அலைவரிசை கடந்த ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் இக்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை கேட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதாகவும் மேற்படி சம்பவம் நடந்த காலத்தில், தாம் இலங்கையில் தங்கியிருக்கவில்லையென்றும் சுரேஷ் சலே அதற்கு மறுதினமே குறித்த தொலைக்காட்சி அலைவரிசைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...