tamilni 60 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்:நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி

Share

ஈஸ்டர் தாக்குதல்:நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி

சூம் தொழில்நுட்பம் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் முன்வைத்த கூற்று தமக்கு மட்டுமன்றி தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான சுரேஷ் சலே கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்துள்ளார்.

நற்பெயருக்கும் மற்றும் உத்தியோகபூர்வ கடமைக்கும் பெரும் பாதிப்பாக அமைவதுடன் தமது பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து நிறுத்துவதற்கும் நேரலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவு பிரதானியான சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சர்வதேச உண்மைக்கான பேரவை மூலம் 2021 அக்டோபர் 23ஆம் திகதி சூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட கூட்டத்தில் தம்மைப் பற்றி தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அதனால் தமக்கு ஏற்பட்ட அப கீர்த்திக்காக சிறில் காமினி அடிகளாரிடம் 30 மில்லியன் ரூபா நட்ட ஈடாக பெற்றுத் தருமாறும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...