tamilni 167 scaled
ஏனையவை

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

Share

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, பிரான்ஸ் நாட்டு பொலிசாரை புலம்பெயர்வோர் சிலர் தாக்கியுள்ளனர்.

பிரான்சின் Calais பகுதியிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் சிலரை பிரான்ஸ் நாட்டு பொலிசார் தடுத்துள்ளனர்.

அப்போது புலம்பெயர்வோர் சிலர் பொலிசார் மீது பாறைகளைத் தூக்கி வீசியுள்ளனர். சிலர் கட்டைகளைக் காட்டி பொலிசாரை மிரட்டிவிட்டு படகில் ஏறி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.

பொலிசார் உடலில் அணிந்திருந்த கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவல் பிரித்தானிய தரப்பைச் சென்றடைய, அங்கு தயாராக காத்திருந்த பிரித்தானிய பொலிசார் Salih Abdullah (33) மற்றும் Ahmed Khater (25) என்னும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் விதி மீறி பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றது உறுதியானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் முறையே 14, 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்துல்லா ஈராக்கையும், அஹமது சூடானையும் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பிரித்தானியாவுக்குள் சிறு படகொன்றில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 51 பேர் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...