tamilni 164 scaled
செய்திகள்விளையாட்டு

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

Share

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி 147 ஓட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனால் அடுத்தநாள் ரிசர்வ் டேவில் , விடப்பட்ட இடத்திலிருந்து போட்டி தொடங்கியது. இதில் விராட் கோலியும், கே எல் ராகுலும் தங்களுடைய வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார்கள்.

குறிப்பாக காயத்திலிருந்து திரும்பி வந்துள்ள கே.எல். ராகுல் 106 பந்துகளில் 111 ஓட்டங்கள் விளாசினார். மறுமுனையில் இருந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் ஒன்பது பவுண்டரிகளும் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 47வது சதம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ஓட்டங்கள் என பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார்.

இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 356 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது. இதனை தொடர்ந்து 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தங்களது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பாகிஸ்தானை காட்டிலும் இன்று சிறப்பாக செயல்பட்டது. இந்திய வேகப்பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் இமாமுல் ஹக் 9 ஓட்டங்களிலும் பாபர் அசாம் 10 ஓட்டங்களிலும் முகமது ரிஸ்வான் இரண்டு ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் 32 ஓவரில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் சிறப்பாக பந்து விஷய குல்திப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....