tamilni 165 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

Share

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று 11ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட 4.65 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நிலநடுக்கம் குறித்து பேராசிரியர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் இந்தோ – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தகடு மற்றும் இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான டெக்டோனிக் தகடுகளில் 08 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த ஆழ்கடல் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனவும், கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் நடுக்கம் ஏற்பட்டால் சுனாமி அபாயம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதுடன், மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை இந்திய – அவுஸ்திரேலிய பீடபூமியில் அமைந்துள்ள இரண்டு தகடுகள் பிரிந்து பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களே இந்த நிலநடுக்கங்களுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அரைக்கோளத்தில் எதிர்காலத்தில் பல நிலநடுக்கங்கள் ஏற்படலாம் எனவும், அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...