rtjy 106 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

Share

இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

இலங்கையில் ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 48 வீதமானோர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பல் மருத்துவ நிறுவனத்தின் பல் சத்திரசிகிச்சை நிபுணர் சம்பா சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய வாய்வழி சுகாதார அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், அதே வயதுடைய குழந்தைகளில் சுமார் 63 சதவீதம் பேர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குழந்தைகளை பல் மருத்துவமனைகளுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் பல் மருத்துவமனைகள் மூடப்பட்டமை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை ஆகியவை குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாக மருத்துவர் சேனநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன் வாய் சுகாதாரத்தை பராமரிப்பதில் பெற்றோரின் அலட்சியமும் குழந்தைகளின் வாய் ஆரோக்கியம் குறைவதற்கு பங்களித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் குழந்தைகள் ஒரு வருடமாக இருக்கும் போது தோன்றும் புதிய பால் பற்கள், அவர்களுக்கு வயது வந்தோருக்கான பற்கள் தோன்றும் வரை, அவற்றை பாதுகாக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...