rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

Share

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு தொடர்பு இருக்க வேண்டும் என நான் பல வருடங்களாக கருதி வந்துள்ளேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல்4 இன் வீடியோவை பார்த்தபின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தொடர்பிருக்கவேண்டும் என நான் கருதிவந்துள்ளேன்.

இது அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான படமாகும் என என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
06 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுகாதார சேவைகளைப் பாதிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் GMOA வலியுறுத்தல்

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் நாட்டின்...

05 16
செய்திகள்இலங்கை

சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல்: இலங்கை நீதிமன்றத்தின் மனிதாபிமான உத்தரவு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) விபத்தில்...

04 15
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: மூளையாகச் செயல்பட்டவரின் பெயரை வெளியிடப் போவதாக உதய கம்மன்பில அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரியின் (Mastermind) அடையாளத்தை எதிர்வரும்...

03 16
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு: ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!

2022 ஆம் ஆண்டில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் சட்டவிரோதமாக வீதி நாடகமொன்றை நடத்தி பொதுமக்களுக்கு...