tamilni 82 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் சிக்கித் தவித்த இலங்கையர்கள்

Share

வெளிநாட்டில் சிக்கித் தவித்த இலங்கையர்கள்

டுபாயில் வேலைக்காக சென்று விட்டு, நாடு திரும்ப விமானப் பயணச்சீட்டு வாங்க முடியாமல் தவித்த 40க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உதவி செய்துள்ளது.

டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துடன் இணைந்து இலங்கையர்களை மிகக் குறைந்த செலவில் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்து வருகிறது.

அங்கு தங்கியுள்ள இலங்கையர்களை குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில், முதலாவது குழுவானது UL 226 என்ற விமானத்தில் கடந்த 23ஆம் திகதியன்று இலங்கையை வந்தடைந்தது.

தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைந்தது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. “நாங்கள் எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு உதவியற்ற சூழ்நிலையில் இருந்தோம். ஆனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் எங்களுக்கு உதவ முன்வந்தன.

அதற்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மீண்டும் இலங்கைக்கு வர முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என இலங்கை வந்த முதலாவது அணியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
24 671f3afd3a539
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளுடன் போராட்டத்தைத் தொடரலாம்: விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள ‘இசுருபாய’ கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அகற்றக்...

image 38043798ff
செய்திகள்இலங்கைபிராந்தியம்

39 முறை வன்முறையில் ஈடுபட்ட பௌத்த துறவி: மனைவியைக் கத்தியால் மிரட்டிய குற்றத்திற்காக ஓராண்டுச் சிறை!

தொடர்ச்சியாகத் தனது மனைவியைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு வந்த 66 வயது பௌத்த துறவி ஒருவருக்கு,...

04 7
இலங்கைசெய்திகள்

ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் சிவில் உடையில் நடமாட்டம்: பழைய பொலிஸ் தலைமையகம் அருகே 2 கமாண்டோக்கள் கைது!

கொழும்பிலுள்ள பழைய பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக, கருப்புத் துணியால் சுற்றப்பட்ட ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கியுடன் சிவில்...

image 55b1ad95b8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய திலினி பிரியமாலிக்கு பிடியாணை: ஹோமாகம நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக...