rtjy 32 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஆபத்தான நபர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஆபத்தான நபர்

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லயில் வட்டிக்கு பணம் கொடுத்த நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான சந்தேகநபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கடன் கொடுத்த ஜானக புஸ்பகுமார வட்டிப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கரவண்டியில் சென்று விட்டு கொரவ பிரதேசத்தில் உள்ள தாய் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் டுபாயில் பதுங்கியிருக்கும் ஒரு குற்றவாளியான பன்ட்டியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலுக்கமைய, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக பன்ட்டியுடன் இருந்து விலகிய கட்டா என்பவர் பன்ட்டிக்கு அதிர்ச்சி கொடுப்பதற்கு இந்த கொலையை செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கொலைக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையின் போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த எந்தத் தகவலும் அவருக்குத் தெரியவில்லை எனவும், அவர் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் சந்தேக நபர் கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் இரண்டு இரட்டை சகோதரர்களில் ஒருவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...