1 10 1 scaled
உலகம்செய்திகள்

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

Share

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

ஜேர்மன் பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மாயமான வழக்கில், சுமார் 17 வருடங்கள் கழித்து தற்போது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Lismore நகரில், தன் நண்பர்களுடன் இரவில் வெளியே சென்றிருந்த Simone Strobel (25) என்னும் ஜேர்மன் இளம்பெண், மர்மமான முறையில் மாயமானார். அவர் பவேரியாவிலுள்ள Würzburg நகரைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, சற்று தொலைவில் அமைந்திருந்த விளையாட்டு வளாகம் ஒன்றில், பனை ஓலைகளின் கீழ் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, Simone கொலை வழக்கு தொடர்பாக 42 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய அதிகாரிகள், Simone மரணம் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...