1 10 1 scaled
உலகம்செய்திகள்

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

Share

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

ஜேர்மன் பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மாயமான வழக்கில், சுமார் 17 வருடங்கள் கழித்து தற்போது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Lismore நகரில், தன் நண்பர்களுடன் இரவில் வெளியே சென்றிருந்த Simone Strobel (25) என்னும் ஜேர்மன் இளம்பெண், மர்மமான முறையில் மாயமானார். அவர் பவேரியாவிலுள்ள Würzburg நகரைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, சற்று தொலைவில் அமைந்திருந்த விளையாட்டு வளாகம் ஒன்றில், பனை ஓலைகளின் கீழ் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, Simone கொலை வழக்கு தொடர்பாக 42 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய அதிகாரிகள், Simone மரணம் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...