Sri Lanka police
இலங்கைசெய்திகள்

மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

Share

மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் நாட்டில் பொலிஸ் சேவையில் 85 ஆயிரம் பொலிஸார் பணிபுரிகின்றனர். எனவும் இன்னமும் 28 ஆயிரம் பேர் பொலிஸ் சேவைக்கு தேவை.

அதன் பிரகாரம் முதற்கட்டமாக 15 ஆயிரம் பேர் இணைத்து பொலிஸ் சேவையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக்குவதற்கான அனுமதியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இராணுவத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் பேர் கொண்ட இரு குழுக்களை பயிற்சியளித்து சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...