rtjy 249 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

Share

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார் .

வடக்கு மாகாணத்தில் எவ்வித ஊழல் மோசடிகளில் தொடர்புபடாத நேர்மையான அதிகாரிகளை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து விலக்கி கீழ் நிலைப் பதவிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த வாகீசனை மகளிர் விவகார அமைச்சுக்கும் மகளிர் விவகாரத்தில் அமைச்சின் செயலாளராக இருந்த ரூபினி வரதலிங்கத்தை பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகத்திற்கும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதிப் பிரத செயலாளராக இருந்த குக நாதனை உள்ளூராட்சி அமைச்சுகும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த தடவை வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவி வகித்தபோது மன்னாரில் அரச காணிகள் பகிர்ந்தாளிப்பதில் தனக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக மாகாண ஆணையாளர் பதவியில் இருந்து குகநாதனை மாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...