rtjy 249 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

Share

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார் .

வடக்கு மாகாணத்தில் எவ்வித ஊழல் மோசடிகளில் தொடர்புபடாத நேர்மையான அதிகாரிகளை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து விலக்கி கீழ் நிலைப் பதவிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த வாகீசனை மகளிர் விவகார அமைச்சுக்கும் மகளிர் விவகாரத்தில் அமைச்சின் செயலாளராக இருந்த ரூபினி வரதலிங்கத்தை பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகத்திற்கும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதிப் பிரத செயலாளராக இருந்த குக நாதனை உள்ளூராட்சி அமைச்சுகும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த தடவை வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவி வகித்தபோது மன்னாரில் அரச காணிகள் பகிர்ந்தாளிப்பதில் தனக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக மாகாண ஆணையாளர் பதவியில் இருந்து குகநாதனை மாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...