கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
உலகம்செய்திகள்

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

Share

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா முழுதும்அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவின் மேற்கு கெலோனா நகரத்தில் தீயானது வேகமாக பரவி வருவதால் 2,400 வீடுகளில் வசிக்கும் சுமார் 36,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ வேகமாக பரவி வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் விமானங்கள் ஊடாக வெளியேறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீப்பரவல் காரணமாக வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை அதிகப்படும் எனவும், சுமார் 15,000 – 20000 வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...