மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோடீஸ்வர வர்த்தகர்!
இலங்கைசெய்திகள்

மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோடீஸ்வர வர்த்தகர்!

Share

மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோடீஸ்வர வர்த்தகர்!

கொலொன்ன பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று (16.08.2023) பணத்துடன் தனது வானில் தெனியாய நகருக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் வீடு திரும்பாததால் குறித்த வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை அனில்கந்த பொது மயானத்துக்கு அருகில், பணத்தை கொண்டு வருவதற்காக வர்த்தகர் சென்ற வானை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை கொலொன்ன பொலிஸாரை தொடர்புகொண்ட போது வர்த்தகர் காணாமல் போன விடயத்தை உறுதி செய்ததுடன் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் அதிகாரிகள் குழு களத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...