tamilni 221 scaled
இலங்கைசெய்திகள்

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

Share

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

திருகோணமலை – நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடைநிறுத்தியுள்ளார்.

பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இனமுரண்பாடு ஏற்படும் என கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, விகாரையின் நிர்மாண பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வந்த நிலையில், தனது முடிவில் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலாங்கொடை மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான பலப்பிட்டிய அம்பருகாராமய விகாரையின் கிளை விகாரையான நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள “விகாராதிபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விகாரையின் விகாராதிபதி விமல தம்மா மஹாநாயக்க தேரரை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நிலாவெளி, இலுப்பை குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படுவதினை தடுக்க ஆளுநர் என்ற வகையில் தனது கடமையை செய்துள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை பெற்று தருவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...