பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு!!.
அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் அதிகாரபூர்வமாக இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் இந்த கால நீடிப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சிக் கால நீடிப்பைச் செயற்படுத்த அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்படவுள்ளது.
அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை அங்கீகரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆட்களை நியமிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் கேட்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியாளர்களில் 18 ஆயிரம் பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பயிற்சி பெற்றவர்களுக்கு தற்போது 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment