கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு
இந்தியாஇலங்கைசெய்திகள்

கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு

Share

கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு

”இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்” என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள்” என்று மக்களவையில் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இந்தக் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், கச்சதீவை இந்தியாவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள இந்த தீவு, பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1974ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி “இந்தோ – இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்” கீழ் கச்சதீவை இலங்கையின் பிரதேசமாக ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...