உலகம்செய்திகள்

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

Share

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

இந்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளில் எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 20ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரிசி உணவை அதிகமாக பயன்படுத்தும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், பல ஐக்கிய அரபு அமீரகவாசிகள் கோடை விடுமுறை முடிந்து திரும்பும் போது இந்தியாவில் இருந்து தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளாக கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, குறிப்பிட்ட சில வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களின் விருப்பமான அரிசியை விடுமுறைக்கு சென்று திரும்பும்போது எடுத்துவருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதில் ஒருவர் ஷப்னா. இவர் சொந்த ஊருக்கு சென்றும் திரும்பும் போது 5 கிலோ அரிசி எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது அரிசிக்கு உள்ளூர் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விடுமுறை முடித்து திரும்பும் போது அரிசி எடுத்து வந்துள்ளார்.
தடை என்பது தற்காலிக சிக்கல்
ஊருக்கு சென்று திரும்பும் போது அரிசி எடுத்து வருவதால், பெரிதாக ஆதாயம் ஏதும் இருப்பதில்லை என்றாலும், பெட்டியில் இடம் இருப்பதால், அரிசி எடுத்து வருவதாக ஷப்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து உலகெங்கிலும் மொத்தம் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மட்டுமின்றி, அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்தே முன்னெடுக்கப்படுகிறது.
இதனால், ஏற்றுமதி தடை என்பது தற்காலிக சிக்கல் எனவும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து போதுமான அளவுக்கு வெள்ளை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....