பாடசாலை மாணவர் மீது சரமாரி தாக்குதல்!
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர் மீது சரமாரி தாக்குதல்!

Share

பாடசாலை மாணவர் மீது சரமாரி தாக்குதல்!

கணேமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் தாக்கியதால், மாணவர் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவன் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாகவும், நேற்று பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மற்றுமொரு மாணவர் அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகனை தலைக்கவசத்தால் நெற்றியிலும் தலையிலும் கடுமையாக தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கணேமுல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த மாணவன் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...