178818 vaccine 1
செய்திகள்இலங்கை

தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!

Share

தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!

நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதற்கமைய, 1 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 1 கோடியே 33 லட்சத்து 71 ஆயிரத்து 290 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 70 லட்சத்து 260 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. இதேவேளை சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 11 லட்சத்து 9 ஆயிரத்து 346 பேருக்கு போடப்பட்டுள்ளது,

இதேவேளை, இதுவரை 8 லட்சத்து 91 ஆயிரத்து 734 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 15 லட்சத்து 9 ஆயிரத்து 89 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும் 43 ஆயிரத்து 450 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதுவரை 43 லட்சத்து 6 ஆயிரத்து 41 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 231 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது,

அதேபோல், 77 லட்சத்து 2 ஆயிரத்து 955 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 75 லட்சத்து 4 ஆயிரத்து 690 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...

Murder Recovered Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து மீட்கப்படும் அடையாளம் தெரியாத சடலங்கள்

இலங்கையின் சில பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாத நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மன்னார் பொலிஸ்...

Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...