இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்
உலகம்செய்திகள்

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

Share

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தியதாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

Simranjit (Shally) Singh (41) என்னும் நபர், இந்தியர்களை கடத்திய விதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியர்களை கால்கரி, ரொரன்றோ மற்றும் மொன்றியலுக்கு விமானம் மூலம் வரவழைக்கும் சிங், பின்னர் அவர்களை ஒன்ராறியோவிலுள்ள கார்ன்வாலுக்கு கொண்டுசென்று, அங்கிருந்து படகு மூலம் St. Lawrence நதிவழியாக அமெரிக்காவுக்குள் அனுப்பிவந்துள்ளார்.

தான் 1,000க்கும் மேற்பட்டவர்களை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தியுள்ளதாக சிங் பெருமை பீற்றிக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள சிங், 2010ஆம் ஆண்டு மனைவி மற்றும் பிள்ளையுடன் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியுள்ளார். பின்னர் அவரது தாயும் சிங்குடைய மற்றொரு பிள்ளையும் கனடா வந்து அவர்களும் அகதி நிலை கோரியுள்ளனர். ஆனால், அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கனடா அதிகாரிகள் சிங்கை நாடுகடத்த முயன்றும், இந்திய தூதரகம் பயண ஆவணங்களை வழங்க மறுத்ததால், அவரை நாடுகடத்த முடியாமல்போயிருக்கிறது.

சிங் கனடாவில் ஒரு பெண்ணை இரண்டாவதாக மணந்துகொள்ள, அந்தப் பெண் சிங்கை ஸ்பான்ஸர் செய்ய, ஆனால், அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் முன் சிங் கைது செய்யப்பட்டுவிட்டார்.

டிசம்பர் மாதம் 28ஆம் திகதி சிங்குக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவருக்கு ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...