delda
இலங்கைசெய்திகள்

வடக்கிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது டெல்டா – வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!

Share

நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த முடிவுகளின்படி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும் ஏனைய பிரிவுகளில் தலா 5 பேருமாக 50 பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...