son dad
செய்திகள்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

Share

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

வவுனியாவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் வவுனியாவில் நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா மதியாமடு, புளியங்கும் பகுதியைச் சேர்ந்த (வயது–73) செபமாலை இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நாட்டில் 2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் இராசதுரை விஜி கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த 12 ஆண்டுகளாக தேடி மகன் பற்றிய நம்பகர தகவல் ஏதும் அறியாமலேயே இந்த தந்தை உயிர்நீத்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்துகொண்டு தொடர்ச்சியாக போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....