வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!

Share

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!

அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் நோயாளர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், மருந்துகளின் தரம் மற்றும் தன்மை குறித்து நோயாளிகளுக்கு உறுதியளித்துள்ளதாகவும், வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் சுகாதார அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேலும், தாதியர்கள், வைத்திய ஊழியர்கள் நோயாளிகளின் உயிரை ஒருபோதும் ஆபத்தில் ஆழ்த்தவில்லை என்றும், அண்மைய நாட்களில் ஊடகங்கள் தெரிவித்தது போல் எந்தவொரு நோயாளியின் உயிருக்கும் வேண்டுமென்றே ஆபத்தினை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சின் தலைமையிலான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ஒவ்வொரு நோயாளியின் உயிரையும் காக்க எப்போதும் உழைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவசர நிலை ஏற்பட்டால், நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...