வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் மோசடி!!! அம்பலமாகும் உண்மைகள்
இலங்கைசெய்திகள்

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் மோசடி!!! அம்பலமாகும் உண்மைகள்

Share

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் மோசடி!!! அம்பலமாகும் உண்மைகள்

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடவுசீட்டை பெற காத்திருந்த மக்கள் இது தொடர்பில் இன்று(21.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த காரியாலயத்திற்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பலர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு வெளியிலுள்ள மாபியாக்களால் மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு குறித்த காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருக்ககூடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்திற்கு வெளியில் இருந்து சிலரால் பெயர்கள் பதியப்பட்டு கடவுசீட்டை பெறுவதற்கான விபரங்கள் திரடப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அலுவலக கட்டுப்பாட்டாளருக்கு தெரிவித்த போது அவர் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என கூறி அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...