WhatsApp Image 2021 09 10 at 21.10.01
செய்திகள்இலங்கை

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாய் கொவிட்டால் சாவு!

Share

யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இணுவிலை சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற கர்ப்பிணிப் பெண்ணே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இவருக்கு முச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவருக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளன. அவர் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் இரண்டும் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

 

யாழில் கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை சாவு!!

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...