tamilni 316 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வெளிநாட்டு சேவை முடக்கம்

Share

இலங்கையின் வெளிநாட்டு சேவை முடக்கம்

அரசியல் நியமனங்களை நோக்காக கொண்டு, நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், போதிய எண்ணிக்கையிலான தொழில் இராஜதந்திரிகள் இல்லாமல் இலங்கையின் வெளிநாட்டு சேவை முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 268 பணியாளர்களுக்கு பதிலாக தற்போது 166 இராஜதந்திரிகள் மட்டுமே பணிகளில் உள்ளனர். அது போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில, தொழில் இராஜதந்திரிகளின் வெற்றிடங்கள் காரணமாக, இலங்கையில் உள்ள சுமார் 60 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் 22 பிரிவுகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தோனேசிய ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொழில் சேவையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் இல்லாமல் இயங்குவதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுச் சேவையும் பல தசாப்தங்களாக அரசியலாக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றன.

தற்போது, வோசிங்டன் மற்றும் மொஸ்கோ போன்ற முக்கிய தலைநகரங்களுக்கு தொழில் அல்லாத தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும், அரசியல்வாதிகளின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் சில பணிகளில் பணியாளர்கள் அதிகமாகவும், சில பணிகளில் ஆட்கள் குறைவாகவும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...