tamilni 312 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் தரப்புகளால் வலுக்கும் எதிர்ப்பு

Share

தமிழ் தரப்புகளால் வலுக்கும் எதிர்ப்பு

இலங்கை ஜனாதிபதியின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரங்களை குறைத்து வழங்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.

தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில், இலங்கை ஜனாதிபதி விக்ரமசிங்க பொறுப்புக்கூறல், அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனினும் அர்த்தத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் விருப்பமின்மை இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

13ஆவது திருத்தம் கொழும்பில் இருந்து ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள இலங்கைச் சட்டமாகும்.

ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லையென்றால் அதுவே, 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் விருப்பமின்மையின் வெளிப்பாடாகும் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...