rohitha
செய்திகள்இலங்கை

அம்பாந்தோட்டைக்கு பைஸர் – உள்நோக்கம் கிடையாது!

Share

அம்பாந்தோட்டைக்கு பைஸர் – உள்நோக்கம் கிடையாது!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சொந்த மாவட்டமாகிய அம்பாந்தோட்டைக்கு மாத்திரம் பெருந்தொகையான பைஸர் கொவிட் தடுப்பூசியை வழங்கியதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.

இவ்வாறு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டுக்குத் தடுப்பூசி கொண்டுவர முடியாது என எதிர்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால் தடுப்பூசி கொண்டுவந்தோம்.

சரியான முறையில் அது வழங்கப்படவில்லை என்றபோது அதனை சரியாக இப்போது செய்துவருகின்றோம்.

இன்றுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று பல்வேறு இடங்களுக்கு தடுப்பூசியை வழங்குகிறோம் என எதிர்கட்சியினர் குறைகூறுகின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் இடைவிலகுகின்றனர் என விமர்சனம் உள்ளது.

அரசாங்கம், அனைத்தையும் ஒன்றிணைத்து செயற்படும் சந்தர்ப்பத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களில் சிலருக்கு விருப்பம் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஏகமனதாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களையே நாம் செயற்படுத்துகின்றோம் – என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...