ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்

Share

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கடிதம் குறித்து விளக்கமளித்த அவர்,

இந்த கடித்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது ஆறு தமிழ் இயக்கங்களும் வடக்கு கிழக்கு இரண்டாக பிரிக்கப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டி கடும் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தது.

இதனையடுத்து இந்தியா கொடுத்த “ஒருபோதும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற வாக்கெடுப்பை நடத்தாமல் பார்த்துக்கொள்வோம்” என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தான் இயக்கங்கள் அதை ஏற்றுக்கொண்டு ஆயுதக்கையளிப்பை செய்தார்கள்.

இதேபோல் 13ஆம் திருத்தத்தின் போது கொண்டுவரப்பட்ட காணி பொலிஸ் அதிகாரங்கள் 36 ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் பிண்ணனியில் தமிழ் பகுதிகளில் ஆக்கிமிப்புக்கள் அதேபோல் இந்துகோவில்கள் அழிக்கப்படுகின்றன.

இந்த விடயங்களை முழுமையாக தொகுத்து கடிதமாக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...

anura kumara
இலங்கை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த...

ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

  நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும்...

Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...