இறுதிப் போர் சாட்சியம் நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்!
இலங்கைசெய்திகள்

இறுதிப் போர் சாட்சியம் நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்!

Share

இறுதிப் போர் சாட்சியம் நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்!

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் அவற்றை சுற்றுலா பிரதேசங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி 24 கடற் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் நந்திக்கடல் கடற்பகுதியும் உள்ளடங்கியுள்ளது.

இப்பகுதிகளை சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள், தனியார் முதலீடுகளை உள்ளடக்கிய வகையிலேயே இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் களப்பு, குடவ, வாடிய, வைக்கால, நீர்கொழும்பு களப்பு, ப்ரீத்திபுர, கொக்கல களப்பு, கிரிந்த, எலிபன்ரொக், உப்புவெளி, சாம்பல்தீவு பீச், மற்றும் நாயாறு பீச் மற்றும் நந்திக்கடல் களப்பும் இதில் உள்ளடங்குவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற, பல்லாயிரம் மக்கள் உயிர் நீத்த, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை மீட்டதாக அரசு அறிவித்த பகுதியாக நந்திக்கடல் பகுதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...