அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்
இலங்கைசெய்திகள்

அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்

Share

அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்

மத்திய கிழக்கு நாட்டிற்கு பணியாளராக சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் 39 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனவும் எஞ்சிய 07 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இவர்கள், சுகவீனங்கள், தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இலங்கைக்கு வருவதற்காக இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வருவதற்காக 2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணியாளர்கள் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களை இந்த நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக குவைத் அரசின் உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் விளைவாக இந்த இலங்கையர்கள் தற்காலிக விமான அனுமதிப்பத்திரத்தில் அனுப்பப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...