நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

Share

நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய பாத்திமா ஃபஸ்னா என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி உட்பட 7 பேர் நேற்று மதியம் அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்கு சென்றிருந்த நிலையில், யுவதி செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி தவறி விழுந்த உடன் தனக்கு நீச்சல் தெரியாது எனக்கூறி உதவிக்கோரியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்திருந்த போதும் முயற்சி பயனளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யுவதியை தேடும் பணியை தொடர கடற்படையின் நீர்மூழ்கிக்குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...