நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

Share

நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய பாத்திமா ஃபஸ்னா என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி உட்பட 7 பேர் நேற்று மதியம் அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்கு சென்றிருந்த நிலையில், யுவதி செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி தவறி விழுந்த உடன் தனக்கு நீச்சல் தெரியாது எனக்கூறி உதவிக்கோரியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்திருந்த போதும் முயற்சி பயனளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யுவதியை தேடும் பணியை தொடர கடற்படையின் நீர்மூழ்கிக்குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...