படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் மாயம்
இலங்கைசெய்திகள்

படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் மாயம்

Share

படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் மாயம்

மன்னார் – கட்டுக்கரை குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்களின் படகு நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது இன்றையதினம் (03.07.2023) பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் – கட்டுக்கரை குளத்தில் நேற்றையதினம் மாலை (02.07.2023) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த படகானது நீர் நிரம்பி கவிழ்ந்துள்ளது.

இந்த நிலையிலே இன்று காலை சகல கடற்றொழிலாளர்கள் தேடிய போதே ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன மற்றைய கடற்றொழிலாளாரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது-37) என்ற கடற்றொழிலாளரை, கடற்றொழிலாளர்கள் மற்றும் மக்கள் இணைந்து கட்டுக்கரை குளத்தில் தேடி வருகின்றனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட சடலமானது மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...