ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

Share

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தை 2048ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொய் கனவு காண வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (02.07.2023) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்கள் தமது உடைமைகளை இழக்கின்றனர். இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.

நாட்டின் பொருளாதார சிக்கலினால் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி பல்வேறு நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

இப்போது ஏனைய பகுதிகளையும் விற்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் அரசாங்கம் எதைப் பற்றி கனவு காண்கிறது? இதன் இலக்கு என்ன?

முத்துராஜவலை முழுவதையும் அழித்து, வெளியாட்களுக்கு விற்று, பணம் சம்பாதித்து, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாக வாழுகின்றார்கள்.

ஆனால், நாட்டு மக்களுக்கு எஞ்சியிருப்பது துன்பம் மட்டுமே. இதை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது என பேராயர் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...