கலவர பூமியான பிரான்ஸ்
உலகம்செய்திகள்

கலவர பூமியான பிரான்ஸ்: பொது போக்குவரத்து ரத்து

Share

கலவர பூமியான பிரான்ஸ்: பொது போக்குவரத்து ரத்து

பிரான்சில் அனைத்து பொது போக்குவரத்தையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

அல்ஜீரிய-மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த நயேல் என்ற 17 வயது சிறுவனை பொலிசார் சுட்டுக் கொன்றதற்கு பிரான்சில் எதிர்ப்புகள் வெடித்தன.

போராட்டங்களை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் பிரான்சில் அனைத்து பொது போக்குவரத்து அமைப்புகளையும் இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து பேருந்து மற்றும் டிராம் சேவைகளும் இரவு 9 மணிக்குப் பிறகு இயங்காது என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.

கலவரம் வெடித்த பிறகு, இறந்த வாலிபரின் தாயும் தனது எதிர்வினையை முன்வைத்தார். எல்லா பொலிஸ்ஸ்காரர்களிடமும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், தன் மகனைக் கொன்றவனிடம்தான் தனக்குப் பிரச்னை என்றும் தாய் மௌனியா பதில் அளித்துள்ளார். அவர் பிரான்ஸ் 5 தொலைக்காட்சியில் பேசினார்.

அதேநேரம், கலவரம் தீவிரமடைய சமூக வலைதளங்களே காரணம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

மேலும் வாலிபரின் மரணத்தை சிலர் தவறாக பயன்படுத்தியதாக இம்மானுவேல் மக்ரோன் குற்றம் சாட்டினார்.

எதிர்ப்புகள் தணிந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர்கள் மீது வீடியோ கேம்களின் தாக்கம் கலவரத்திற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...